மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்!

Share this News:

கரூர் (15 ஜூன் 2021): மின் கட்டணம் செலுத்த இனி நாட்கள் நீட்டிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ”மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள். அவகாசம் இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. 50 சதவீதப் பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அவகாசம் தேவைப்படாது. மே 10ஆம் தேதிமுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி கட்டணத்தைக் கட்ட இன்று கடைசி நாள்” என்றார்.

ஏற்கனவே ஊரடங்கு முடியும்வரை மின்வெட்டு இருக்காது என ஏற்கனவே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply