பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

Share this News:

ராவல்பிண்டி(13 ஜூன் 2020): பாகிஸ்தான் ராவல்பிண்டியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளார்.

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கபரி பஜாரில் சில மர்மநபர்கள் வெடிகுண்டை வீசிச் சென்றனர். அந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் சிஜிதுல் ஹாசன் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் மூடப்பட்ட கட்டிடம் ஒன்றும் பழுதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News: