வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களை கொரோனா அதிக அளவில் தாக்கும் – ஆராய்சியாளர்கள் தகவல்!

Share this News:

லண்டன் (06 மே 2020): வைட்டமின்-டி குறைபாடு உள்ளவர்களை அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்குவதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்..

கொரோனா வைரசை ஒழிக்‍க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொரோனா, யார் யாரை எல்லாம் தாக்குகிறது? என்பதை சில ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் அறக்‍கட்டளை மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட பெரும்பாலானவர்களுக்‍கு, வைட்டமின்-D சத்து குறைபாடு இருப்பது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது. மேலும், வைட்டமின்-D குறைபாடு உள்ளவர்களே கொரோனாவால் அதிகம் உயிரிழப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது.

எனவே கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவுவது போன்றவற்றுடன், வைட்டமின்-D சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவும், காலை, மாலை சூரிய ஒளியில் நிற்கவும், மக்‍களை, ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Share this News: