வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட நியூசிலாந்து பிரதமர்!

Share this News:

ஆக்லாந்து (22 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை எதிர்க்கும் வகையிலும் முஸ்லிம்களிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் நியூசிலாந்து மக்கள் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

உலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நியூசிலாந்து மக்கள் முஸ்லிம்களுக்கு தங்களது ஆதரவை பலவகைகளில் தெரிவித்து வருகின்றனர். மேலும் (வெள்ளிக்கிழமை) நியூசிலாந்தில் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிந்து ஒற்றுமையை வலியுறுத்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா எர்டோன் இரண்டு நிமிட மவுண அஞ்சலிக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தார். மேலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான அழைப்பை தேசிய தொலைக்காட்சி மற்றும் ரேடியோக்களில் ஒளிபரப்பு செய்யவும் நியூசிலாந்து பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்றைய வெள்ளிக்கிழமை தொழுகையில் நியூசிலாந்து பிரதமர் பொதுமக்களுடன் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கான தனது ஆதரவை தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply