BREAKING: பாகிஸ்தான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து!

Share this News:

கராச்சி (22 மே 2020): பாகிஸ்தானில், பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்‍கு உள்ளானதில், அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப் படுகிறது.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து கராச்சி சென்ற ஏர்பஸ் ஏ-320 ரக பயணிகள் விமானம், கராச்சி விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து நொறுங்கியது.

விமானம் தரையிறங்கியபோது இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 98 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்‍கலாம் என அஞ்சப்படுகிறது.

பயணிகள் 91 பேரும் விமானப் பணியாளர்கள் 7 பேரும் விமானத்தில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

முழுமையான விபரங்கள் இந்நேரம்.காமில் விரைவில்…

 


Share this News: