இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.
மேலும் தோல்விக்கு பொறுப்பேற்று ரணில் விகரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனை அடுத்து புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று மாலை அறிவித்துள்ளதாகவும் விரைவில் பிரதமராக மகிந்த ராஜபக்சே தனது பணிகளை தொடங்குவார் என்றும் இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் விஜயானந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே சகோதரர்கள் கைகளில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.