நாம் வாழ்வில் முன்னேறுவதற்கும், இழப்புகள் ஏற்படாமல் நம்மை தற்காத்து கொள்வதற்கும் ஒப்பீடு பெரிதும் துணை புரியும்.
முன்னோர்களின் கடந்த கால வரலாற்றை நம்முடைய நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால், நமது சந்ததிகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும்.
இவ்வாறு ஒப்பீட்டு பார்ப்பது இன்றியமையாததும் கூட. ஏனெனில் அப்போது தான் நமக்கு ஏற்படவிருக்கும் சில ஆபத்துகளை நாம் முன் கூட்டியே உணர்ந்து அதைத் தடுக்க முடியும். அந்த அடிப்படையில் தான் நாம் இங்கே சில ஒப்பீடுகளைப் பார்க்கவிருக்கிறோம்.
பாசிச சித்தாந்தத்தையும் இந்துத்தவா சித்தாந்தத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் ஒத்துப் போவதை நம்மால் காண முடியும். அதனால்தான் இன்று மத்தியில் ஆட்சியிலிருக்கும் இந்துத்துவா சித்தாந்தத்தைக் கொண்டுள்ள பாஜகவை, பாசிச பாஜக என்று அழைக்கிறோம். ஆனால் பாசிசத்தோடு மட்டும் பாஜகவை சுருக்கிவிட முடியாது. அதன் பட்டியல் நீண்டது.
உலகப் போரின் போது கொடூரர்களாக திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் ஹிட்லர் மற்றொருவர் முசோலினி. இதில் ஹிட்லரின் நாஜிசக் கொள்கையையும் முசோலினியின் பாசிசக் கொள்கையையும் இந்துத்துவா தன்னுள் கொண்டுள்ளது.
அதே போல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பயங்கரவாத அரசாக திகழ்ந்த நாடுகள் இரண்டு. ஒன்று ஆக்கிரமிக்கபட்ட பாலஸ்தீனம் (யூதர்களின் இஸ்ரேல்) மற்றொன்று பர்மா. இஸ்ரேல் யூத பயங்கரவாதிகளின் சியோனிஸ சித்தாந்தத்தையும், பர்மா பவுத்தர்களின் ஜண்டாயிசக் கொள்கையையும் இந்துத்துவா தன்னுள் கொண்டுள்ளது.
இவ்வாறு உலகப் பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த வடிவமாக இந்துத்துவ சித்தாந்தம் திகழ்கிறது.
பாசிசம் + நாஜிசம் + சியோனிசம் + ஜண்டாயிசம் = இந்துத்துவா
ஆகவே உலகப் பயங்கரவாதத்தை இந்துத்துவ சித்தாந்தங்களோடு ஒப்பிட்டு அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒப்பீடுகளைத்தான் இந்த கட்டுரையின் வாயிலாக நாம் பார்க்கவிருக்கிறோம்.
எனவே, இந்துத்துவ சித்தாந்தங்களோடு ஒப்பிட்டுப் பேசும் அந்த முதல் ஒப்பீடு எது..? நாளை …..!
பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5