முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில அரசுகளுக்கு கோரிக்கை!

புதுடெல்லி (13 ஏப் 2022): ராம நவமி ஊர்வலங்கள் தொடர்பாக நாட்டின் சில பகுதிகளில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு, அத்தகைய செயல்களை உடனடியாகத் தடுக்குமாறு ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் (JIH) மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. இச்சம்பவங்களை ‘முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகள்’ என்று அழைத்த ஜேஐஎச் துணைத் தலைவர் சலீம் கூறுகையில், “ராமநவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலங்களில், ஆயுதங்கள், குறிப்பாக வாள்கள் ஏந்தி வந்தனர். எல்லா இடங்களிலும் இதே மாதிரிதான் காணப்பட்டது. கத்திகள், வெளிப்படையாகக் காட்டி,…

மேலும்...

ராமநவமி கலவரம் – 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறை கொடூர தாக்குதல் – வீடியோ!

கார்கோன் (12 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். வட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தால் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான கார்கோனில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட பிறகும், காவல்துறை அதிகாரிகள் ஏப்ரல் 11 அதிகாலை பிலால் மசூதியின் கதவுகளை உடைத்து நுழைந்து அங்கிருந்தவர்களிடம் பயத்தின் சூழலை உருவாக்கியுள்ளனர். மசூதியின் எதிரில் இருந்த வீட்டிற்குள்…

மேலும்...

ராமநவமி ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களுக்கிடையே முஸ்லிம்கள் செய்த அந்த நல்ல காரியம்!

லக்னோ (12 ஏப் 2022): உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்கள் இடப்பட்ட போதிலும், கோசமிட்டவர்களுக்கு முஸ்லிம்கள் பழச்சாறு பரிமாறியுள்ளனர். வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, அதன் ஒரு பகுதியாக, வாள் மற்றும் பிற பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோசமிட்டுள்ளனர். ஊர்வலத்தின் பின்னணியில் உரத்த குரலில் கேட்கப்பட்ட பாடல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதாகவும்,…

மேலும்...

இந்து முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் நிகழ்சிநிரல்: சிவசேனா தாக்கு!

மும்பை (12 ஏப் 2022): பாஜகவின் இந்துத்துவா, சுயநலம் மற்றும் வெற்று என்றும், பாஜகவின் இந்துத்துவவாதிகள்” நாட்டில் பிரிவினைக்கு முந்தைய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது. பாஜகவுக்கும் இந்துத்துவாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் பாஜகவிடம் இல்லை என்றும் சிவசேனாவின் பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மசூதிகளுக்கு வெளியே ‘ஹனுமான் பாடலை இசைப்பதன்…

மேலும்...

எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே அழித்தனர் – முஸ்லிம் வியாபாரி கதறல்!

பெங்களூரு (11 ஏப் 2022): எனது வாழ்வாதாரத்தை என் கண் முன்னே காவி துணி ஏந்திய குழுக்கள் அழித்தனர் என்று முஸ்லிம் பழ வியாபாரி தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள நுக்கிகேரி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு பழ வண்டிகளை இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை சேதப்படுத்தினர். இரு வாரங்களுக்கு முன்பு ஸ்ரீராம்சேனை அமைப்பினர், இஸ்லாமிய வணிகர்களை வளாகத்திலிருந்து வெளியேற்ற கோவிலை நிர்வகிக்கும் அமைப்பிற்கு காலக்கெடுவை வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும்…

மேலும்...

பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாருக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் போராட்டம்!

லக்னோ (11 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனிதாசுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் கைராபாத் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய…

மேலும்...

ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார், சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த…

மேலும்...

ஒலிபெருக்கிகள் தடை உத்தரவை கோவில்களும் பின்பற்ற வேண்டும் – பெங்களூரு தலைமை இமாம்!

பெங்களூரு (08 ஏப் 2022): கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்களின் ஒலிபெருக்கி சர்ச்சையில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு ஜாமியா மசூதியின் தலைமை இமாம் முகமது இம்ரான் ரஷாதி வியாழக்கிழமை, ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில்களும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். . இதுகுறித்து ரஷாதி கூறுகையில், “பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஒலியைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை மசூதிகளில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் பிறப்பித்த…

மேலும்...

சிபிஐக்கு எதிராக ஆகார் படேல் நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு தாக்கல்!

புதுடெல்லி (08 ஏப் 2022): சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தலைவர் ஆகர் படேலை மீண்டும் குடியேற்றத்தில் சிபிஐ அனுமதிக்காததை அடுத்து, அவர் மீது வெளியிடப்பட்ட லுக்அவுட் சுற்றறிக்கையை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்ட நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாததற்காக புலனாய்வு அமைப்புக்கு எதிராக அவர் இப்போது அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆகார் படேல், பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்ல இருந்தபோது அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு எதிராக…

மேலும்...

முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் – இந்துத்துவ சாமியார் மிரட்டல் – வீடியோ

லக்னோ (08 ஏப் 2022): உத்திர பிரதேசத்தில் காவி உடையணிந்த சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் மிரட்டல் விடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நவராத்திரி விழாவையொட்டி உத்திர பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனி தாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது….

மேலும்...