முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடகாவில் இந்துத்துவாவினரின் அடாவடி எல்லை மீறி சென்றுகொண்டுள்ளது. ஹிஜாப்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், கோவில் கண்காட்சிகளில் முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிப்பு, ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதலுக்கு எதிர்ப்பு என கூக்குரல் இட்டு வரும் இந்துத்துவாவினர், இப்போது முஸ்லிம் பழ வியாபாரிகளைக் குறிவைத்து, மொத்த பழச் சந்தையில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. கர்நாடகாவில்…

மேலும்...

வழிபாட்டுத்தலங்களில் உள்ள ஒலிவாங்கிகளை காவல்துறையினர் பறிமுதல்!

பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் விதிமுறைகளை மீறி ஒலிபெருக்கியை பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்களில் காவல்துறையினர் ஒலிவாங்கிகளை பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர். பல இந்துத்வா அமைப்புகள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஒலி மாசுபாடு குறித்த நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு நகர காவல்துறையினர் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். செவ்வாயன்று, நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வழிபாட்டுத்தலங்களில் இருந்து பல ஒலிவாங்கிகள்…

மேலும்...

பாங்கு நேரத்தில் கோவில்களில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டம்!

பெங்களூரு (04 ஏப் 2022): கர்நாடகாவில் தொழுகைக்கு அழைக்கும் (பாங்கு) நேரத்தில் இந்து பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி விவகாரம் என கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், புனித ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ள சூழலில் மசூதிகளில் பாங்கு அழைக்கும் நேரங்களில் “ஓம் நம சிவா”, “ஜெய் ஸ்ரீராம்” கோஷங்கள் மற்றும் பிற பக்தி பிரார்த்தனைகளை ஒளிபரப்ப இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. பெங்களூரில் உள்ள ஆஞ்சநேயா கோவிலில் பாங்கு…

மேலும்...

கர்நாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை!

பெங்களூரு (04 ஏப் 2022): மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனையின் மாநிலத் தலைவர் சித்தலிங்க சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மசூதிகளில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்…

மேலும்...

ஹலால் இறைச்சி விற்பனையாளர் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (01 ஏப் 2022): கர்நாடகாவில் ஹலால் இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்துவா குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினர் வியாழக்கிழமை பத்ராவதியில் ஒரு முஸ்லிம் விற்பனையாளரைத் தாக்கியுள்ளது. இதுகுறித்து ANI இடம் பேசிய ஷிவமொக்கா காவல் கண்காணிப்பாளர் (SP) BM லக்ஷ்மி பிரசாத், தொடர்புடைய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். “பஜ்ரங் தள் ஆர்வலர்கள் வாக்குவாதம் செய்து ஒரு முஸ்லீம் வியாபாரியைத் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து பத்ராவதியில்…

மேலும்...

பாபா ராம்தேவின் நிறுவன தயாரிப்பு பொருட்களுக்கு வழங்கப்பட ஹலால் சான்றிதழ்!

புதுடெல்லி (31 மார்ச் 2022): ஆயுர்வேத அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலியின் ஆவணம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது, இது பதஞ்சலிக்கும் அதன் தயாரிப்புகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில், யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலிக்கு ஜமியத் உலமா-இ-ஹிந்த் ‘ஹலால்’ (அனுமதிக்கப்பட்ட) சான்றிதழை வழங்கியுள்ளது. இது தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹிஜாப் தடை சர்ச்சை மற்றும் கர்நாடகாவில் கோயில் வளாகங்களில் முஸ்லிம் விற்பனையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

மேலும்...

பெண்கள் விருப்பப்படி வாழ விடுங்கள் – ஹிஜாப் விவகாரத்தில் உலக அழகி பரபரப்பு கருத்து!

சண்டிகர் 931 மார்ச் 2022): ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் கவுர் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். சண்டிகரில் ​​ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்னாஸ், ஹிஜாப் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். ஹிஜாப் பிரச்சினையை அரசியலாக்குபவர்களுக்கு எதிரிப்பு தெரிவித்த ஹர்னாஸ், ஒரு பெண் ஹிஜாப் அணிவது அவரின் விருப்பம், என்றார். மேலும் “பெண்கள் இஷ்டப்படி வாழட்டும். நம் பெண்கள் அனைவரும் வெவ்வேறு நிறங்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள். நாம் ஒருவருக்கொருவர் ஒருவரை…

மேலும்...

ஹிஜாப் தடையால் தேர்வை புறக்கணித்த கல்லூரி மாணவிகள்!

உடுப்பி (31 மார்ச் 2022): ஹிஜாப் தடை காரணமாக கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த 40 மாணவிகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்நிலைப் பல்கலைக் கழகத் தேர்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மார்ச் 15 அன்று, கர்நாடக உயர் நீதிமன்றம், பள்ளி கல்லுரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதித்தது. மேலும் ஹிஜாப் இஸ்லாத்தில் இன்றியமையாத மத நடைமுறை அல்ல என்றும் நீதிமன்றம் கூறியது. கல்வி நிறுவனங்களில் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது….

மேலும்...

ஹலால் அல்லாத கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல்!

பெங்களூரு (31 மார்ச் 2022): ஹலால் அல்லாத கோழிக்கறி கேட்டு முஸ்லிம் வியாபாரி மீது பஜ்ரங்தள் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்திற்குப் பிறகு கர்நாடகாவில் இந்துத்துவாவினர் பல்வேறு விதமாக முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவிலுக்கு அருகில் முஸ்லீம் வியாபாரிகளுக்கு தடை விதித்தனர். தற்போது ஹலால் இறைச்சி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில் ஹலால் கோழிக்கறி கோரி முஸ்லிம் வியாபாரிகளை அடித்து உதைத்த சம்பவம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஷிவமொகா பகுதியில் பஜ்ரங் தள் குழுவினர்…

மேலும்...

12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு – 17 பேர் கைது!

லக்னோ (31 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 17 பேரை கைது செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து வினாத்தாள் கசிந்ததால்…

மேலும்...