விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது….

மேலும்...

கொரோனா பாதித்தும் கல்லூரி தேர்வை கைவிடாத மாணவர்!

வாணியம்பாடி (20 செப் 2020): கொரோனா பாதித்தும் கல்லூரி இறுதியாண்டு தேர்வை எழுதியுள்ளார் மாணவர் அனீசுர் ரஹ்மான்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்த அனீசூர் ரஹமான் என்ற மாணவர், வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் இளங்கலை வணிகவியல் என்கிற பி.காம் பாடப்பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கொரோனா தொற்று பாதிக்கபட்டு, கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி பல்கலைகழகம் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவ – மாணவிகளுக்கான தேர்வுகளை…

மேலும்...

அதிமுகவில் உட் பூசல் – டிடிவி தினகரன் டெல்லி பயணம்!

சென்னை (20 செப் 2020): அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷமிட்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஜனவரியில் விடுதலையாவார் என செய்திகள்…

மேலும்...

அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்!

சென்னை (19 செப் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்….

மேலும்...

சேவை தொடரட்டும் – மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (17 செப் 2020): இன்று பிறந்த நாள் காணும் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டால்ன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு…

மேலும்...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி உள்ளது? – மகன் தகவல்!

சென்னை (17 செப் 2020): கொரோனா பாதித்து தொடர் சிகிச்சையில் இருந்து வரும் ‘எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது” என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார். கடந்த மாதம் 5ம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் எஸ்பிபி. . அவருக்கு ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

புதிய பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர்!

சென்னை (17 செப் 2020): விழுப்புரத்தில் புதிதாக தொடங்க இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிப்பதாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டாகப் பிரிக்கப்படும் பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவிற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டுவது குறித்த ஆலோசனையில் உள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதனிடையே விழுப்புரத்தில் அமைய…

மேலும்...

உள்ளே இருந்தவர்தான் கமல்ஹாசன் – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

சென்னை (16 செப் 2020): பிக்பாஸை தொகுத்து வழங்கும் கமல் கொரோனாவுக்கு பயந்து 100 நாட்கள் வீட்டில் அடைந்து கிடந்தவர்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “, 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில்…

மேலும்...

நீட் தேர்வு தற்கொலை விவகாரம் – ஸ்டாலினை மடக்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை (15 செப் 2020): நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு திமுகவே காரணம் என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு…

மேலும்...

கொரோனாவால் தமிழகத்தில் குழந்தைகள் பெருமளவில் பாதிப்பு!

சென்னை (15 செப் 2020): தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 78 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,153 ஆண்கள், 2,599 பெண்கள் என மொத்தம் 5,752 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 10 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 156 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 770…

மேலும்...