மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த இஸ்ரேலின் பொய் புகார்!

பாலஸ்தீன்(08 நவம்பர், 2023): பாலஸ்தீனில் உள்ள “ஷேக் ஹமத் பின் கலீஃபா” மருத்துவனைக் கட்டடத்தின் கீழ் பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கான சுரங்கப்பாதை உள்ளது என இஸ்ரேல் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இதனால், சமீபத்தில் இம் மருத்துவமனையும் இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது. பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் காரணமாக, பாலஸ்தீன் காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், ஐநா மையங்கள் ஆகியவற்றை இஸ்ரேல் தாக்கி வருகிறது. இன்று வரை பாலஸ்தீனில் 10,600 பொதுமக்கள்…

மேலும்...

இந்திய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

கராச்சி: துபையிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி பயணித்த இந்தியன் எக்ஸ்ப்ரஸ் விமானம், அவசர கதியில் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. துபையிலிருந்து அமிர்தசரஸ் நோக்கி IX192 என்ற இந்தியன் எக்ஸ்ப்ரஸ் விமானம் 14/10/2023 அன்று காலை வந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் மீது பறந்து கொண்டிருக்கும் போது, பயணி ஒருவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு தரையிறங்க அனுமதி கோரினார். உரிய…

மேலும்...

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்...

துருக்கி பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 21 ஆயிரத்தை தாண்டியது!

இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம்…

மேலும்...

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார். இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி…

மேலும்...

நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti Airlines Flight 691 விமானம், பொக்ரா விமான நிலைய ஓடுபாதையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. மோசமான வானிலையே காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தெரிவிக்கிறது. விபத்தின்போது 68 பயணிகளும் சிப்பந்திகளும் இருந்தனர். இச்…

மேலும்...

நான் ஏன் பிறந்தேன் என்பதை இஸ்லாத்தில் உணர்ந்தேன் – பிரபல பாப் பாடகர் நெகிழ்ச்சி!

மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். இஹ்ராமில் உள்ள புகைப்படம் புனித ஹராமின் முன் இருந்து எடுக்கப்பட்டது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது அனைத்து கேள்விகளுக்கும் இஸ்லாம் பதிலளித்ததாகவும், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பூமியில் அவர் தான் அதிர்ஷ்டசாலி என்றும் எழுதியுள்ளார். “எனக்கு விருப்பமான மக்காவிற்கு மீண்டும் வந்திருக்கிறேன். இந்த இடம்…

மேலும்...

உலகிலேயே பாதுகாப்பான நாடு எது தெரியுமா?

கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது. Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும்…

மேலும்...

18 முதல் 25 வரை இளைஞர்களுக்கு ஆணுறை இலவசம்!

பாரிஸ் (04 ஜன 2023): பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரான்ஸ் நாட்டின் இளைஞர்களுக்கு கருத்தரிப்பு ஏற்படுவதை தவிர்க்க மருந்து கடைகளில் ஆணுறையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். கருத்தடையில் இது ஒரு சிறிய புரட்சி என்று தனது அரசின் முடிவை புகழ்ந்துள்ள மெக்ரான். நாட்டின் 25 வயதுக்கு குறைவான பெண்களின் கருத்தரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம்…

மேலும்...

49 ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது!

நியூயார்க் (03 ஜன 2023): பழைய ஸ்மார்ட்போன் பதிப்புகளில் இனி WhatsApp கிடைக்காது. ஆப்பிள், சாம்சங், ஹூவாய் மற்றும் எல்ஜி போன்ற பழைய போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்தியுள்ளது. WhatsApp பயன்பாடு இப்போது Android OS பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேல் மற்றும் iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில் வேலை செய்யும். “தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்களைத் தொடர, பழைய இயக்க முறைமையில் வாட்ஸ் அப் வேலை செய்வதை நிறுத்தியுள்ளது. இதுகுறித்து உங்கள் OS இல்…

மேலும்...