இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை குரு மரணம்!

Share this News:

திருவனந்தபுரம் (06 ஏப் 2020): பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை குருவும் மலையாள இசையமைப்பாளருமான அர்ஜுனன் மாஸ்டர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85.

1968-ல் இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார் அர்ஜுனன். 200 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார். கே.ஜே. யேசுதாஸ், அர்ஜுனனின் இசையில் தான் முதலில் பாடினார்.

1981-ல் அர்ஜுனன் இசையமைத்த Adimachangala என்கிற மலையாளப் படத்தில் முதல் முதலாக கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். இதனால் அர்ஜுனன் மீது ரஹ்மானுக்கு எப்போதும் அன்பு உண்டு.

மேலும் ஏ.ஆர். ரஹ்மான் 2017-ல் நடைபெற்ற அர்ஜுனனின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவிலிருந்து வந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜுனன் மாஸ்டரின் மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள், கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply