பதைபதைக்கும் பாலிவுட் – அமிதாபை தொடர்ந்து அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று!

Share this News:

மும்பை (12 ஜூலை 2020): இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என முடிவு வந்திருப்பதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். அமிதாப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அவரே ட்விட்டரில் கூறி உள்ளார்.

இந்நிலையில் அமிதாபின் மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அபிஷேக் பச்சனும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தி திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது.


Share this News: