பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது.

இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி கறுப்புப் பண வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி மீதான மூன்றாவது வழக்கு இதுவாகும்.

நோரா ஃபதே மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் ஆடம்பர கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை சந்திரசேகரிடமிருந்து பெற்றனர் இருவர் மீதும் குற்றச்சாட்டு இருந்து வருகின்றன. மேலும் சுகேஷுடனான உறவு, வாட்ஸ்அப் உரையாடல்கள் போன்றவை குறித்து அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.

இதற்கிடையில் விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகை தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது அமலாக்கத்துறையின் நிதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...