தர்பார் தோல்விக்கு அரசு உதவும் – பரபரப்பை ஏற்படுத்தும் அமைச்சர்!

Share this News:

சென்னை (04 பிப் 2020): தர்பார் படத்தால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பெரிய நடிகர்கல் நடிக்கும் திரைப்படங்களின் டிக்கெட் தொகை குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் திரைத்துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ, “இனி சினிமா டிக்கெட்டுகளை அரசே ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. விலை நிர்ணயம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

அதேபோல, சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளுக்கான விலையையும் அரசே நிர்ணயிக்கும்” எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ரஜினியின் தர்பார் படத்தால் ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் அரசை அணுகினால் அதற்கான உதவியை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply