சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கழுவி ஊற்றிய நடுவர்!

கோவா (29 நவ 2022): கோவா-வில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அதில் திரையிடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் நாகரீகமற்றது என்று திரைப்பட விழா நடுவர் கூறியிருக்கிறார்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜி-யில் நடைபெற்றது. 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்றிரவு நடைபெற்றது.

இதில் சிறந்த திரைப்படமாக ஸ்பெயின் மொழி படம் தேர்வுசெய்யப்பட்டது. இதேபோல, சிறந்த நடிகர், நடிகைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான திரையுலக பிரபலம் விருதை, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்.

நிறைவு விழாவில் பேசிய திரைப்பட விழா தலைமை நடுவரான இஸ்ரேல் திரைப்பட இயக்குநர் நாதவ் லபிட், காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1990-ம் ஆண்டில் ஏராளமானோர் கொல்லப்பட்டது தொடர்பான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இது பிரச்சாரம் செய்யும் வகையிலானது மற்றும் நாகரீகமற்ற திரைப்படம் என்றும் விமர்சித்தார். இதனைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார். இதுபோன்ற திருவிழாவில் இந்தப் படத்தை திரையிடுவது பொருத்தமானதாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார். விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது என்பது கலை மற்றும் வாழ்க்கையில் அவசியமானது என்பதால், தனது கருத்தை வெளிப்படுத்துவதாகவும் நாதவ் லபிட் கூறினார்.

ஹாட் நியூஸ்:

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...