பிக்பாஸ் தமிழில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விட்ஸ்ட் !

Share this News:

சென்னை (13 ஜன 2021): பிக்பாஸ் தமிழ் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் வெளியாகியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 4 நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது, வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

அந்நாளில் பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது பிக்பாஸில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து இதை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ஆசைப்படுவது யார் என பிக்பாஸ் கேட்பார்.

அதுபோல் அப்பணத்தை பெற்றுக்கொண்டு கடந்த சீசனில் கவின் வெளியேறியதை பார்த்தோம். அதேபோல் இம்முறை பிக்பாஸ் ஒரு தொகை கொடுத்து போட்டியாளர்களை கேட்க, அதை எடுத்துக்கொண்டு வெளியேற ரம்யா முடிவு செய்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.


Share this News:

Leave a Reply