ரீல்ஸ் மோகம் – மூவர் பலி!

காஜியாபாத் (15 டிச 2022): உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரயில் தண்டவாளம் அருகே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 3 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் ஒரு இளம் பெண்ணும் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டனர்.

உ.பியைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சமூக வலைத் தளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக ஒரு த்ரில் வீடியோவை உருவாக்கும் ஆவல் ஏற்பட்டது.

இதனால் ரயில் அருகே வரும்வரை காத்திருந்து ரயிலுக்கு நெருக்கமாக நின்று வீடியோ எடுத்தனர். ஆனால், ரயில் நெருங்கும் முன் அவர்களால் தண்டவாளத்தில் இருந்து விலக முடியாமல் ரயில் மோதி பரிதாபமாக தூக்கி வீசப்பட்டனர்.

முசோரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லு கர்ஹி ரயில்வே கேட் அருகே காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...