குடியரசு தினத்தில் பயங்கரம் – ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு!

கவுஹாத்தி (26 ஜன 2020): இந்தியாவின் குடியரசு தினமான இன்று அஸ்ஸாமில் ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

அஸ்ஸாமின் திபுர்காரில் 2 இடங்களிலும், சோனரி, துலியாஜன் மற்ரும் தூம்தூமா ஆகிய இடங்களிலும் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மாநில போலீஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன பதிவில், “குண்டு வெடிப்புச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் தீவிரவாதக் குழுக்களை புறக்கணித்ததன் விரக்தியில் இந்தப் புனித நாளில் தீவிரவாதிகள் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, 8 தடை செய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த 644 பேர் குவஹாட்டியில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...