போலீசா? பாஜக செய்தி தொடர்பாளரா? – டெல்லி போலீசை விளாசும் ஆம் ஆத்மி!

புதுடில்லி (05 பிப் 2020): டெல்லி போலீசார் பா.ஜ.கவின் செய்திதொடர்பாளரை போல் பேசுவதாக ஆம்ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது சமீபத்தில் பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தினான், அவனை கைது செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார், தற்போது அவர் ஆம்ஆத்மி கட்சியின் உறுப்பினர் எனக் கூறி, அதற்கு ஆதாரமாக போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அது தாக்குதல் நடத்திய கபில் குஜ்ஜார், தனது தந்தையுடன் ஆம்ஆத்மியில் இணைந்த போது எடுக்கப்பட்டது எனவும் கூறி உள்ளனர்

டில்லி போலீசாரின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆம்ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங், இவை அனைத்தும் பா.ஜ.,வின் சதி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் போலீசார் செயல்படுகின்றனர். அமித்ஷா அனைத்து வகையான தந்திரங்கள் மற்றும் சதிகளை கையாண்டு வருகிறார். என்றார்.

மேலும் துணை கமிஷனர், பா.ஜ.க,வின் ஊதுகுழல் போல் செயல்படுகிறார். பா.ஜகவின்., செய்தி தொடர்பாளராக இருக்க வேண்டிய ராஜேஷ் தியோ, தவறுதலாக டிசிபி ஆகி இது போன்ற அறிக்கைகளை அளித்து வருகிறார். இத்தகைய பேச்சுக்களுக்காக அவருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்புவோம். தேர்தல் கமிஷனிடமும் புகார் அளிக்க உள்ளோம் என்றார்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....