தொடர்ந்து சரிவை சந்திக்கும் அதானி குழுமம் – கண்காணிப்பை தீவிரப்படுத்தும் செபி!

Share this News:

புதுடெல்லி (23 பிப் 2023): பங்குச்சந்தையில் கௌதம் அதானியின் நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ள நிலையில், செபி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

கௌதம் அதானியின் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் பொறுப்புகள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகளை செபி கண்காணித்து வருகிறது. சட்டச் சிக்கல்களுக்குப் பயந்து, அதானி குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து ஓரியண்ட் சிமெண்ட்ஸ் விலகியுள்ளது.

சுமார் 25 லட்சம் கோடியாக இருந்த அதானி குழும நிறுவனங்களின் தற்போதைய மதிப்பு 7.5 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.

நேற்று மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 10 சதவீதமும், அதானி போர்ட்ஸ் பங்கு விலை 6 சதவீதமும் சரிந்தது. பத்து அதானி நிறுவனங்கள் புதன்கிழமை பிற்பகல் வரை ரூ.40,000 கோடி இழந்துள்ளன. முன்னணி நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர் மற்றும் அதானி கிரீன் ஆகியவை 5 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளன.

ஜனவரி 24-ம் தேதி வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் இருந்து 11.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி பங்குகள் உயர்த்தப்பட்ட மதிப்பில் வர்த்தகம் செய்யப்படுகிறது என்று அமெரிக்க நிதி ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply