பாஜகவுக்கே வாக்களியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

புதுடெல்லி (05 பிப் 2020): பாஜக கூறுவதுபோல் நான் பயங்கரவாதி எனில் தாமரை சின்னத்திற்கே வாக்களியுங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் பிப்.,08 ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தின்போது, பாஜ எம்பி., பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கடுமையாக விமர்சித்தார்.

இதற்கிடையே டில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குஜ்ஜார் என்பவர், ஆம்ஆத்மி உறுப்பினர் என டில்லி போலீஸ் கூறியதற்கு ஆம்ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து தெரிவிக்கையில், . தேர்தலுக்காக பாஜ.க,வினரின் அரசியல் ஸ்டண்ட் தான் இது. போலீஸை பாஜக பயன்படுத்துகிறது.

நான் எனது குடும்பத்துக்காகவோ அல்லது என் குழந்தைகளுக்காகவோ எதையும் செய்யவில்லை, நாட்டு சேவையில் என்னை அர்ப்பணித்தேன். ஐஐடி.,யில் என்னுடன் படித்த 80 சதவீதத்தினர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர். நான் வருமான வரி கமிஷனர் பணியில் இருந்து விலகினேன். என்னை ஹிந்து மதத்திற்கு விரோதமானவன் என்கின்றனர். நான் தீவிரமான ஹனுமன் பக்தர். பாஜ., இம்முறை ஷஹீன் பாக் பற்றி மட்டும் பிரசாரம் செய்கிறது. அதைத்தவிர பிரசாரம் செய்ய வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.

பாஜ க., எம்பி பர்வேஷ் வர்மா என்னை பயங்கரவாதி என்று கூறியபோது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு டெல்லி மக்களே பதிலளிக்கட்டும். பிப்ரவரி,08ம் தேதி நடக்கும் தேர்தலில் நான் பயங்கரவாதி எனில் அவர்கள் ‘தாமரை’ சின்னத்திலும், இல்லையெனில் ‘துடைப்பம்’ சின்னத்திலும் ஓட்டளிக்கட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...