ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்டனம்!

புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன், ரிக்ஷாவில் பயணித்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை குழந்தைகள் குழு ஒன்று தாக்கும் காட்சிகள் வெளியாகின. பெண்களின் எதிர்ப்பையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெல்லியின் பஹத்கஞ்சில் ஜப்பானிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் மகளிர் ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அனைவரும் பஹத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் சாலையில் நடந்து செல்லும் முஸ்லிம் பெண் மீது சிறுவர்கள் சிலர் தண்ணீர் பலூன்களை வீசுகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சிறார்களே இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் அதனை பார்க்கும் பெரியவர்கள் யாரும் அவர்களைத் தடுக்க முயலுவதில்லை. இதனை கடுமையாக கண்டித்துள்ள நீதிபதி கட்ஜு, இது அனைவரையும் அவமதிக்கும் செயல். ஹோலியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமா? இதுபோன்ற சம்பவங்கள் நம் அனைவருக்கும் அவமானம்.’ என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...