முடிவுக்கு வந்தது பிபிசி அலுவலக சோதனை!

மும்பை (17 பிப் 2023): பிபிசியின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது.

பிபிசியின் 100 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற செயலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. வருமான வரித்துறையினர் 10 ஆண்டு கணக்குகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர்.

நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் பிபிசி தரப்பில் எதிர்மறையான அணுகுமுறை இருந்ததே சோதனைகளுக்கு காரணம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், அவர்களின் தனிப்பட்ட வருமானம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் பிபிசி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ஷிப்டுகளாக 24 அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிபிசிக்கு எதிரான நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு டெல்லி அலுவலகம் முன்பு மத்தியப் படைகள் குவிக்கப்பட்டன. பிபிசி ஊடக நிறுவனத்துக்கு எதிரான மத்திய நடவடிக்கைக்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது.

இதற்கிடையே வருமான வரித்துறையின் சோதனையை நியாயப்படுத்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிலர் இந்திய செய்தி நிறுவனங்களை விட வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை நம்புவதாகவும், நாட்டின் நீதிமன்றங்களை கூட அவர்கள் நம்புவதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...