காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

Share this News:

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று காஷ்மீர் திரும்பியது. இன்றைய பயணம் பனிஹாலில் இருந்து அனந்த்நாக் வரை திட்டமிடப்பட்டது.

ஆனால் பயணம் தொடங்கி பத்து கிலோமீட்டர் தொலைவில் பாதுகாப்பு காரணங்களை கூறி பயணம் அவசரமாக நிறுத்தப்பட்டது. உமர் அப்துல்லா இன்று இருவருடனும் இருந்தார்.

பாதுகாப்பு பிரச்னைகள் இருந்தால், பயணத்தை நிறுத்துவதாக ஜெய்ராம் ரமேஷ் முன்னதாக உறுதியளித்தார். நேற்று பாரத் ஜோடோ யாத்திரை நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று தொடங்கப்பட்ட யாத்திரை திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்புச் சிக்கல்கள் தொடர்ந்தால், நாளையும் யாத்திரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply