குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் கட்சியிலிருந்து விலகல்!

போபால் (08 பிப் 2020): குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச பாஜக தலைவர்களில் ஒருவரான உஸ்மான் பட்டேல் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லி ஷஹீன் பாக்கில் பெண்கள் கடுங் குளிரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தூரில் பாஜக கவுன்சிலர் ஒருவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தமது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கஜ்ரானா வட்டாரத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர். படேல். மேலும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில், மத்திய பிரதேசம் முழுவதும் பாஜகவின் சிறு பான்மை பிரிவைச் சேர்ந்த 100க்கான உறுப்பினர்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ராஜினாமா செய்துள்ள நிலையில் உஸ்மான் பட்டேல் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேலும் பலர் பாஜகவிலிருந்து விலகக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...