கொரோனா தடுப்பூசியும் முஸ்லிம்களும் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு!

Share this News:

லக்னோ (13 ஜன 2021); “இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் 19 தடுப்பூசிகளை நம்பாத முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்லலாம்.” என்று உத்தரபிரதேசம் சர்தானாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ சங்கீதா சிங் சோம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் “சில முஸ்லிம்கள் நம் நாட்டையும், நமது விஞ்ஞானிகளையும், நமது போலீஸ் படையையும், பிரதமர் மோடியையும் நம்பாதது துரதிர்ஷ்டவசமானது. அவர்களின் ஆன்மா பாகிஸ்தானின் ஆன்மா. அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும், எங்கள் விஞ்ஞானிகளின் பணியில் சந்தேகம் கொள்ளக்கூடாது, ”என்று சங்கீதா சிங் சோமன் கூறியுள்ளார்.

கோவிட் தடுப்பூசிகளில் பன்றி இறைச்சி பயன்படுத்தப்படுவதாக வதந்திகள் பரவின. ஆனால் இது வெறும் போலி பிரச்சாரம் என்று அதிகாரிகளே தெளிவுபடுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply