ஜெய் மோடிஜி என்று சொல்ல மறுத்த மாணவர்கள் – வைரலாகும் வீடியோ!

Share this News:

புதுடெல்லி (04 மார்ச் 2022): உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் விமானத்தில் ஜெய் மோடிஜி என்று அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்து அமைதி காத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள் அண்டைய நாடான ருமேனியாவிற்கு வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை ஏற்றி வந்தபோது மாணவர்கள் விமானத்தில் ஏறிய பின், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் கோஷங்களை எழுப்பினார். அவர் பாரத் மாதா கி ஜெய். என்று அழைக்கின்றனர். ‘மாண்புமிகு மோடிஜி’ என்று சொன்னதும் மாணவர்கள் மௌனம் காக்கின்றனர்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Share this News:

Leave a Reply