டெல்லி மசூதியை தாக்கி காவிக்கொடி ஏற்றிய இந்துத்துவாவினர் – முஸ்லீம் இளைஞர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் என்ற போர்வையில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தேசிய பாதுகாப்பு (என்எஸ்ஏ) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு வருடம் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கிறது.

சமூக ஊடகங்களில் ஹிந்துத்துவவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பகிரங்கமாக காண்பிக்கும் வீடியோக்கள் மற்றும் ஆத்திரமூட்டும் முழக்கங்களுடன் மோதல்களைத் தூண்டும் வீடியோக்கள் ஆதாரங்களாக இருந்தும், முஸ்லிம்களை மட்டும் காவல்துறை வேட்டையாடியுள்ளது.

முக்கிய குற்றவாளிகளாக காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட அன்சார், சலீம், சோனு என்ற இமாம் ஷேக், தில்ஷாத் மற்றும் அஹிர் ஆகியோர் மீது என்எஸ்ஏ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமேற்கு டெல்லியில் நடந்த மோதல் காரணமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை கமிஷனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதை அடுத்து, முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தில் காவல்துறை உட்பட இருவர் காயமடைந்தனர். ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமதியின்றி அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது மசூதி முன் ஊர்வலம் சென்றபோது, ​​ இந்துத்துவாவினர் ஆத்திரமூட்டும் கோஷங்கள் எழுப்பியதாலும், மசூதி மினாரில் காவிக்கொடி ஏற்றியதை அடுத்தும் அங்கு மோதல் ஏற்பட்டது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...