மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

புதுடெல்லி (28 செப் 2020): வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு தனி தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....