சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு!

Share this News:

புதுடெல்லி (14 ஏப் 2021): நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, இன்று பிற்பகல் 12 மணியளவில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய கல்வித்துறை செயலாளர், மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார் .

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. 12ம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன்1ம் தேதி ஆய்வு நடத்தி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எந்த வகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்இ முடிவு செய்யும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply