பாஜகவில் நுழைந்த மேலும் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

Share this News:

அசாம் (29 டிச 2020): அசாமின் முன்னாள் அமைச்சரும், கோலாகாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அஜந்தா நியோக், லக்கிபூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்தீப் கோவலா ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளனர்.

அசாம் பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ் மற்றும் மாநில நிதி மற்றும் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்தனர்.

கட்சி விரோத செயல்களுக்காக அஜந்தா நியோகியை டிசம்பர் 25 அன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றியது. அஜந்தா நியோக் கோலகாட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்று முறை அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தருண் கோகோயின் அமைச்சரவையில் பல முக்கிய இலாகாக்களையும் வைத்திருந்தார்.

லக்கிபூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அமர்ந்த எம்.எல்.ஏ ராஜ்தீப் கோவாலா அக்டோபர் 9 ஆம் தேதி காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பாஜகவில் இணைந்த பின் அஜந்தா நியோக் தெரிவிக்கையில், காங்கிரசில் எந்த மரியாதையும் இல்லை என்றும், கட்சியின் தேசிய தலைமை அடிமட்ட தொண்டர்களை கருத்தில் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்., ​​ராஜ்தீப் கோவாலா, ” காங்கிரஸ் வழிநடத்துதல் இல்லாத கட்சி” என தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply