இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்து 48 ஆயிரம்!

Share this News:

புதுடெல்லி (29 ஜூன் 2020):இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,83,18-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 19,459 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 377 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 16,475 பேர் உயிரிழந்த நிலையில் 3,21,723 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து மூன்றாவது இடத்த்தில் உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,64,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 7429 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86,575 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் டெல்லி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டெல்லியில் 83,077 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,623 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 52,607 பேர் குணமடைந்துள்ளனர். 3-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 82,275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1079 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.


Share this News: