ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்கள் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்!

வாரணாசி (06 செப் 2022): ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிலையை இந்துக்கள் தரிசனம் செய்ய அனுமதி கோரிய வழக்கில் இவ்விவகாரத்தில் முஸ்லீம் தரப்பினர் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

உத்திர பிரதேசம் வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள “ஆதிவிஷேஷ்வரை” ‘தரிசனம்’ செய்யக் கோரி விஸ்வ வைதிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் கிரண் சிங் பிசென், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த வளாகத்திற்குள் முஸ்லிம்கள் நுழைவதை தடை செய்யவும் , அதை இந்துக்களிடம் ஒப்படைக்கவும் மனுவில் கோரியிருந்தார்.

இதுகுறித்த விசாரணையில் முஸ்லீம் தரப்பு இதுகுறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரியது. அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...