லக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29 அன்று இந்துவாக மதம் மாறினார். இவருக்கும் இந்து ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து வழக்கப்படி ஜூலை 31 அன்று நடந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு பெண் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த திபதி மகேஷ் சந்திர திரிபாதி, மதமாற்றம் திருமணத்திற்காக மட்டுமே நடந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் மதத்தில் அடிப்படை அறிவு அல்லது நம்பிக்கை இல்லாமல் திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லுபடியாகாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.