திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29 அன்று இந்துவாக மதம் மாறினார். இவருக்கும் இந்து ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து வழக்கப்படி ஜூலை 31 அன்று நடந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு பெண் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த திபதி மகேஷ் சந்திர திரிபாதி, மதமாற்றம் திருமணத்திற்காக மட்டுமே நடந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் மதத்தில் அடிப்படை அறிவு அல்லது நம்பிக்கை இல்லாமல் திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லுபடியாகாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஹாட் நியூஸ்:

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...