பசுவை கட்டிபிடித்தல் – விலங்குகள் நல வாரியம் திடீர் பல்டி!

Share this News:

புதுடெல்லி (10 பிப் 2023): காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அரவணைப்பு தினமாக கொண்டாடும் அறிவிப்பை இந்திய விலங்குகள் நல வாரியம் திரும்ப பெற்றுள்ளது.

இந்திய விலங்குகள் நல வாரியம், கடந்த 6-ம் தேதி வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 14 அன்று பசுக்களை கட்டிபிடித்து கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒவ்வொரு பசு நேசரும் இதைச் செய்ய வேண்டும் என வாரியம் தெரிவித்தது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் அப்போது அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் இது கடும் விமர்சனத்திற்குள்ளானது. சிலர் மீம்ஸ் போட்டு இதை விமர்சித்திருந்தனர். அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர். காதலர் தினத்தை சிதைக்கும் முன்னெடுப்பு என்று அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தச் சூழலில், விலங்குகள் நல வாரியம் தற்போது தமது அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.


Share this News:

Leave a Reply