அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை!

அஹமதாபாத் (18 பிப் 2022): அஹமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அஹமதாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 56 பேர் பலியானார்கள், 200 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். அதில், 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக இந்த குண்டுவெடிப்பு பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக காவல்துறையினர் 85 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 1,100க்கும் அதிகமானோர் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு விசாரணைகளும் கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டது

இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஏ.ஆர்.படேல், 49 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 28 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அவர்களை விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.

49 குற்றவாளிகளில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மீதமுளள 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...