புதுடெல்லி (12 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறமிருக்க டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவிவருகிறது. இது இப்படியிருக்க ஒருபுறம் டெங்கு காய்ச்சலும் அதிக அளவில் பரவிவருகிறது.
இப்போது வரும் நோயாளிகளில் காய்ச்சல் வந்தாலே அது கொரோனாவாகத்தான் இருக்கும் என்கிற நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்வதால் டெங்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவத்துறை உள்ளது.