ஐரோப்பிய நாடுகளின் 154 சட்ட வல்லுநர்கள் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு கடும் கண்டனம்!

புதுடெல்லி (25 ஜன 2020): ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த தலைச்சிறந்த 154 சட்ட வல்லுனர்கள் ஒன்றினைந்து இந்தியாவின் நீதிக்கு புறம்பான CAA – குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களான இவர்கள், இந்த குடியுரிமை சட்டத் திருத்ததை “பாரபட்சமானது மற்றும் ஆபத்தான பிரிவினை ஏற்படுத்துவது” என்று எச்சரித்துள்ளார்கள்.

இன்னும் சில தினங்களில் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் முழுமையான ஐரோப்பிய பாராளுமன்ற கூட்டத்தில் சி.ஏ.ஏ.விற்கு எதிரான இந்த கடுமையான எதிர்ப்பை அவர்கள் வெளியிடுகிறார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடுமையான ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் மேலும் மேலும் வலுவாகி வரும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமான 154 சட்ட வல்லுனர்கள் இதற்கு எதிராக குரல் எழுப்ப இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...