உத்திர பிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த களமிறங்கும் விவசாயிகள்!

லக்னோ (13 ஜூன் 2021): உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய சரியை சந்திக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று பாஜகவினரே குற்றம் சாட்டும் அளவுக்கு மோசமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாநிலமான உபியில் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் முஸ்லிம்களின் ஒரு வாக்குகூட கிடைக்காது என்கிற நிலையில் பாஜக உள்ளது.

இது தவிர மிக முக்கியமாக வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் உ.பி.விவசாயிகளும் அதிகளவு பங்கேற்றனர். இவர்களும், பிற மாநில விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களை திரட்ட ஆயத்தமாக இருக்கின்றனர்.

இனி மதங்களை காட்டி மக்களை திசை திருப்புவது இனி எடுபடாது. என்று ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....