குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல்!

Share this News:

புதுடெல்லி (26 ஆக 2022): மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார்

மேலும் தனது அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் எழுதியுள்ள ஆசாத், “மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் இந்திய தேசிய காங்கிரஸுடனான எனது அரை நூற்றாண்டு தொடர்பைத் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

ஜெய்வீர் ஷெர்கில், கபில் சிபல், அஸ்வனி குமார், ஹர்திக் படேல் மற்றும் சுனில் ஜாகர் உள்ளிட்ட முக்கிய கட்சித் தலைவர்கள் சமீபத்தில் வெளியேறுவதைக் கண்ட காங்கிரஸுக்கு ஆசாத்தின் ராஜினாமா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply