புனே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

புனே (21 ஜன 2021): நாட்டின் முன்னணி கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புனே சீரம் நிறுவனத்தில் டெர்மினல் ஒன் அருகே மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு படையின் பத்து பிரிவுகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன.

கோவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலை தீ விபத்து இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். தீ விபத்தில் யாரும் சிக்கவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தொழிற்சாலை இந்தியாவில் 30 மில்லியன் சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற கோவிட் போராளிகளுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....