குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐந்து பேர் கைது!

ஸ்ரீநகர் (17 ஜன 2020): குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக ஐந்து பயங்கரவாதிகள் ஸ்ரீநகரில் வியாழனன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வியாழனன்று பதிவிட்டுள்ளதாவது:

குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய ஜெய்ஷ் அமைப்பின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹசரத்பால் பகுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் கண்டறியபட்டுள்ளனர்.

ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அய்ஜாஸ் அஹமத் ஷேக், அசார் காலனி பகுதியைச் சேர்ந்த உமர் ஹமீத் ஷேக் மற்றும் இம்தியாஸ் அஹமத் ஷிக்லா, இலாஹிபா சவுரா பகுதியைச் சேர்ந்த ஷாஹீன் பரூக் மற்றும் ஹசரத்பால் சதார்பால் பகுதியைச் சேர்ந்த அஹமத் மிர் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு உதவியதாக இஷ்பக் தர் என்ற பயங்கரவாதி அவந்திபோராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...