காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை!

ஸ்ரீநகர் (24 மார்ச் 2020): காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்ய உத்தரவு.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஒமர் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அவரது சகோதரி சாரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒமர் அப்துல்லா விடுதலை குறித்து மத்திய அரசும், யூனியன் பிரதேச நிர்வாகமும் தங்கள் முடிவை அடுத்த வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, ஒமர் அப்துல்லா மீது போடப்பட்டிருந்த பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று(மார்ச் 24) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் – ஸ்டாலின் உறுதிமொழி!

சென்னை (16 மார்ச் 2023): : உலக இஸ்லாமிய வெறுப்பு தினத்தையொட்டி சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...