குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் மீது வழக்கு!

லக்னோ (04 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் கவர்னர் அஜிஸ் குரோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் காங். மூத்த தலைவரும், உ.பி. உத்தர்காண்ட் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கவர்னராக இருந்தவருமான அஜிஸ் குரேஷி உ.பி. மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெண்கள் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக மெழுகு வர்த்தி ஏந்தி பேரணி சென்றார்.

தடையை மீறி, உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதாக நேற்று குரேஷி உள்ளிட்ட 7 பேர் மீது லக்னோ நகரின் கோமதி நகர் போலீஸ் நிலைய போலீசார் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...

சவூதி அரேபியாவிற்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

ரியாத் (18 மார்ச் 2023): சவூதிக்கு சுற்றுலா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. விசிட் விசாவைப் போலன்றி, சுற்றுலா விசாவில்...