பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக 4 எஸ்டிபிஐயினர் கைது!

ஆலப்புழா (21 டிச 2021): கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பைக்கையும் காவல்துறையினர் கைப்பற்றினர். சரியான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதனிடையே, ஆலப்புழா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் அறிவிக்கப்பட்டத் தடை உத்தரவு டிசம்பர் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, வரும் 22ம் தேதி காலை 6 மணி வரை இந்தத் தடை நீடிக்கும். மாவட்டத்தில் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...