உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவரகிறார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்!

Share this News:

புதுடெல்லி (20 மே 2020): உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தன், நாளை மறுதினம் பதவியேற்கிறார்.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍ குழு தலைவராக தற்போது, ஜப்பானை சேர்ந்த மருத்துவர் ஹிரோகி நகாதனி இருந்து வருகிறார்.

இந்நிலையில், புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் வர்தனை நியமிக்‍க, 130 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாளை மறுதினம் நடைபெறவுள்ள உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு கூட்டத்தில், இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும் என்றும், அன்றைய தினமே திரு. ஹர்ஷ் வர்தன், பதவியேற்றுக்‍ கொள்வார் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக்‍குழு தலைவராக பொறுப்பேற்க உள்ள திரு. ஹர்ஷ் வர்தன், அடுத்த 3 ஆண்டுகளுக்‍கு அந்த பதவியில் நீடிப்பார்.


Share this News: