இந்தியாவில் அமைதி காக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் – காரணம் ஏன்?

Share this News:

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 8 நாட்களாக ஒரு ஊடக சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவில் கோவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அதேவேளைல் இந்தியாவில் கோவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என்றாலும், உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் கோவிட் -19 ஹாட்ஸ்பாட் ஆகிறது.

மே 7 முதல், இந்தியா ஒவ்வொரு நாளும் 3,200 க்கும் மேற்பட்ட புதிய கோவிட் -19 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை மே 11 முதல் மேலும் உயர்ந்தது, ஒவ்வொரு நாளும் 3,500 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகள் காணப்படுகின்றன. மேலும், கடந்த நான்கு நாட்களில் இது தினசரி 4,950 க்கும் மேற்பட்ட புதிய வழக்குகளாக அதிகரித்துள்ளது. இந்த  மே 20 அன்று இந்தியாவின் அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை 5,611 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும் இன்று இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் அதன் மோசமான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறதையும் காட்டுகிறது. இந்த நிலைமையில் கோவிட் 19 இனிமேல் எவ்வாறு பரவுகிறது என்பதில் தெளிவு இல்லை என்பதே உண்மை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடியும், பொருளாதார சரிவும் மேலும் நெருக்கடியை அதிகரிக்கின்றன.

நெருக்கடியான நேரங்களில் அரசு அவ்வப்போது தகவல் அளித்து வரவேண்டும் அதிலும் குறிப்பாக இப்போதைய நிலையில் சுகாதாரத்துறை மிக முக்கியமாக தினமும் ஊடகங்களிடம் தற்போதைய நிலை குறித்து தகவல் தெரிவிப்பது முக்கியம் ஆனால் அதனை தவிர்ப்பது ஏனோ?


Share this News: