அதானி விவகாரத்தில் எஸ்பிஐ, எல்ஐசி க்கு அழுத்தம் தரப்பட்டதா? – பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

புதுடெல்லி (19 பிப் 22023): அதானி விவகாரத்தில் பிரதமர் மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யும்படி எல்ஐசி, எஸ்பிஐ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டதா? எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஜெய்ராம் ரமேஷ் தன் டிவிட்டரில், ‘‘அதானி என்டர்பிரைசஸ் பொதுப்பங்குகளில் முதலீடு செய்யும்படி பொதுத்துறை நிறுவனங்களான எல்ஐசி, எஸ்பிஐ வங்கிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?. இந்த விவகாரத்தில் இன்னமும் பிரதமர் மோடி அமைதியாக இல்லாமல் தனது மவுனத்தை கலைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

கோவையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கிய இந்து முன்னணியினர் கைது!

கோவை (15 மார்ச் 2023): தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது வன்முறை நடப்பதாக சங்பரிவாரம் நடத்திய போலிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர்...

இந்துத்துவாவினர் நடத்திய ஊர்வலத்தில் மசூதி, முஸ்லிம் வீடுகள் மீது கல் வீசி தாக்குதல்!

பெங்களூரு (15 மார்ச் 2023): கர்நாடகாவில் மசூதி, வீடுகள், உருது பள்ளி மற்றும் வாகனங்கள் மீது கல் வீச்சில் ஈடுபட்ட இந்துத்துவவாதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாவேரியில் மசூதிகள், வீடுகள்,...