ஜார்கண்டில் மீண்டும் கொடூரம் – கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி!

Share this News:

டம்கா (13 மே 2020): ஜார்கண்ட் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுபஹான் அன்சாரி,(26). அவரது நண்பர் துலால் மிர்தா(22) ஆகியோர் ஆடு திருடியதாகக் கூறி இருவரையும் கிராமத்திற்குள் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதில் சுபஹான் பரிதாபமாக உயிரிழந்தார்.துலால் மிர்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி அம்பர் லக்தா தெரிவித்தார். இவ்விவகாரம் ஜார்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்டில் கும்பல் தாக்குதல் என்பது இது முதல்முறையல்ல, பலமுறை அங்கு கும்பல் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News: